பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் தனது 96-வது வயதில் அவர் உயிரிழந்தார். இந்நிலையில் மகாராணி எலிசபெத்தின் இறுதி நிகழ்ச்சிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த இறுதி நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார். இதற்காக, குடியரசுத் தலைவர் முர்மு 3 நாள் பயணமாக செப்டம்பர் 17-ஆம் தேதி லண்டன் செல்கிறார்.