states

இடி மின்னலுடன் லேசான மழை

சென்னை, செப். 19- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  திங்களன்று (செப்.19) ஒருசில இடங் களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை   ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் செப்.20ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய க்கூடும்.மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங் கள், தமிழ்நாடு கடலோர கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் செப்.21 ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.   மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடதமிழ் நாடு கடலோர மாவட்டங் கள், புதுச்சேரி மற்றும் காரை க்கால் பகுதிகளில் செப்.22 ஆம் தேதி ஓரிரு இடங் களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத் திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அள வில் இருக்கக்கூடும்” என தெரிவித்துள்ளது.

;