states

தொழிற்தகராறு மசோதாவை திரும்பப் பெற்றது கர்நாடக அரசு!

பெங்களூரு, செப். 20 - கர்நாடகத்தில் தொழி லாளர் சட்டங்களை மாற்றி அமைக்கும் வகையில் தொழில் தகராறு திருத்த மசோதா கடந்த 2020-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும்  தொழிற்சாலைகளை மூடி னால் மட்டுமே கர்நாடக அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் பணி நேரமும் 75 மணி நேரத்தில் இருந்து 125 மணி நேரமாக உயர்த்தப்பட்டு இருந்தது. இதனால் இந்த மசோ தாவுக்கு பல்வேறு தொழிற் சங்கத்தினர் எதிர்ப்பு தெரி வித்தனர். ஆனால், எதிர்ப் பையும் மீறி கர்நாடக சட்டப் பேரவையில் தொழிற்தக ராறு திருத்த மசோதாவுக்கு அனுமதி கிடைத்தது. ஆனால், கர்நாடக சட்ட மேலவையில் இந்த மசோதா வுக்கு ஒப்புதல் கிடைக்க வில்லை. இதனால் அந்த மசோதா கிடப்பில் போடப் பட்டது. இந்த நிலையில் தொழில் தகராறு மசோதா முழுமையாக திரும்பப் பெற்றுக் கொள்ளப்படு வதாக கர்நாடக அரசு அறி வித்துள்ளது.

;