states

இந்தியத் தொழிலாளர் 42 பேர் பலி குவைத்தில் கொடிய சுரண்டல் முறை உள்ளது

இந்தியக் கட்டுமானத் தொழிலாளர்கள் சம்மேளனம் அதிர்ச்சித் தகவல்

குவைத்தில் மங்காப் பகுதி யில் புதன்கிழமையன்று ஆறு மாடிக் கட்டிடம் ஒன்  றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியா வைச் சேர்ந்த 42 பேர் துயரார்ந்த  முறையில் இறந்துள்ளமைக்கு இந்  தியக் கட்டுமானத் தொழிலாளர்கள் சம்மேளனம் (சிஐடியு) ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.  இறந்த தொழிலாளர்கள் அனை வரும் என்பிடிசி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த கட்டுமானத் தொழிலாளர் களாவார்கள். இது தொடர்பாக சம்மேளனத் தின் பொதுச் செயலாளர் யு.பி. ஜோசப் வெளியிட்டுள்ள அறிக்கை  வருமாறு: ஊடகங்களில் வெளியாகி யுள்ள செய்திகளிலிருந்து தீ விபத்  தின் காரணமாக ஏற்பட்ட புகையை  சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திண றல் ஏற்பட்டு மரணம் அடைந்துள்  ளார்கள். இறந்த தொழிலாளர்கள் அனைவரும் என்பிடிசி குழுமத்  தால் பணிக்கு அமர்த்தப்பட்டவர் களாவார்கள். இக்குழுமம் மேற்படி கட்டிடத்தை தொழிலாளர்கள் தங்குவதற்காக வாடகைக்கு ஏற் பாடு செய்திருந்தது. நவீன அடிமை முறை வளைகுடா நாடுகளில் இந்தி யத் தொழிலாளர்கள் எவ்வளவு மோசமான வாழ்நிலையில் தங்க வைக்கப்பட்டிருந்திருக்கிறார்கள் என்பதை அதிர்ச்சியளித்திடும் இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை நமக்கு வெளிப்படுத்துகிறது. வளைகுடா நாடுகளில் பணி யாற்றுவதற்காக ‘கஃபாலா’ எனப்  படும் மிகவும் சுரண்டல்தன்மை யுடன் கூடிய முதலாளி-தொழி லாளி ஒப்பந்த முறையானது நவீன கால அடிமைத்தனத்தை வெளிப் படுத்தக்கூடிய ஒன்றாகும். இந்தமுறையின்கீழ்தான் ஓமன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமி ரேட்ஸ், குவைத், கத்தார், பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகளுக்கு தொழிலாளர்கள் அதிக செலவுகள் செய்து, முறைகேடாகவும், மோச டியான முறையிலும் அனுப்பி வைக்  கப்படுகிறார்கள். வளைகுடா நாடுகளில் பணிபுரி யும் தொழிலாளர்கள் மிகவும் மோச மான பணிநிலைமைகளில் பணிபுரி கிறார்கள். தொழிற்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு என்பவை மிகவும் மோசமாக இருக்கின்றன. இறந்த தொழிலாளர்களுக்காக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரி வித்திடும் அதே சமயத்தில், குவைத்  அரசாங்கம், நடந்துள்ள சம்பவம்  குறித்து உயர்மட்ட அளவில் விசா ரணை நடத்தி, இந்த சம்பவத்திற் குப் பொறுப்பானவர்கள் மீது உரிய  நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று இந்தியக் கட்டுமானத் தொழி லாளர் சம்மேளனம் வலியுறுத்து கிறது. புலம்பெயர்ந்து சென்றுள்ள இந்தியத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்தம் குடும்பத்தினரையும் பாதுகாத்திட, பாஜக கூட்டணி அரசாங்கம் உரிய  நடவடிக்கைகளைத் துரித கதி யில் எடுத்திட வேண்டும். இறந்த தொழிலாளர்களுக்கு போதுமான அளவு இழப்பீடு  வழங்கிடவும் ஒன்றிய அரசாங்கம்  முன்வர வேண்டும் என்றும்,  இறந்தவர்களின் குடும்பத்தின ருக்கு வேலைகள் அளித்திட முன்  வர வேண்டும் என்றும், இறந்த வர்களின் உடலை இந்தியா வுக்குக் கொண்டுவர உரிய நட வடிக்கைகள் உடனடியாக எடுத்திட வேண்டும் என்றும் இந்தியக் கட்டு மானத் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்  பட்டுள்ளது.             (ந.நி)