சென்னை,அக்.15- சென்னையில் ரயிலில் தள்ளி கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்ப வத்திற்கும் அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேதனையை தெரிவித்துள்ளது. குற்ற வாளிக்கு விரைவாக உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத் தில் கல்லூரி மாணவி சத்யா ரயிலில் தள்ளி படு கொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. இந்த வலியை யும், வேதனையையும் தாங்க முடியாமல் அவ ரது தந்தை மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டுள்ளது மேலும் துயரத்தின் உச்சமாக அமைந்துள்ளது. சதீஷ் என்பவர் சத்யாவை ஒருதலையாக காதலித்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவரது காதலை சத்யா ஏற்க மறுத்த நிலையில் இந்தக் கொடூர கொலை யை செய்துள்ளார். பெண்களைப் போகப் பொருளாக கருதும் ஆணாதிக்க மற்றும் நுகர்வு கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இந்தப் படுகொலையைக் கருத வேண்டியுள்ளது. சதீஷ் மீது முன்கூட்டியே சில புகார்கள் கொடுக்கப்பட்டும், ஒவ்வொரு முறையும் எழுதி வாங்கிக்கொண்டு புகாரை முடித்து வைக்கும் வேலைதான் காவல்நிலையத்தில் நடந்திருக்கி றது.
பின்தொடர்ந்து தொந்தரவு செய்தல் என்பது தனிக்குற்றமாக ஆக்கப்பட்ட பின்பும் காவல்துறை இத்தகைய புகார்களை புறந் தள்ளுவது முற்றிலும் நியாயமற்றது. ஆண்-பெண் உறவு குறித்த ஆரோக்கி யமான சூழலை உருவாக்க வேண்டியது சமூ கத்தின் பொறுப்பு. பள்ளிகளில் இதற்கான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மேலும் திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பெண்களை இழிவாக சித்தரிக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். காதல் என்பது இயல்பானது, வரவேற்கத் தக்கது. ஆனால், அது இருதரப்பு ஒப்புதலை கொண்டதாக அமைய வேண்டும். பெண் களை ஆண்களின் உடமையாக கருதும் மன நிலை தான் இத்தகைய கொலைகளுக்கு கார ணமாக அமைகிறது. பாலியல் தொடர்பான புகார்கள் மீது காவல்துறை விரைந்து நட வடிக்கை எடுப்பதோடு உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண் டும். தமிழகத்தில் பெண்கள் - சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதை தடுத்து நிறுத்த தமி ழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். இந்தக் கொடூர கொலை யில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு விரைவாக உரிய தண்டனை வழங்கப்பட வேண்டு மென்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.