போபால், ஜூன் 23 - மத்தியப் பிரதேச அரசுப் பணியா ளர் தேர்வாணையம் (Madhya Pra desh Public Service Commission -MPPSC) சார்பில், மத்தியப் பிரதேச மாநில சிவில் சர்வீஸ் தேர்வு கடந்த ஜூன் 19 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வில் காஷ்மீர் தொடர்பான எழுப்பப்பட்டிருந்த கேள்வி சர்ச்சை யைக் கிளப்பியுள்ளது. அதாவது, “காஷ்மீரை, பாகிஸ்தா னுக்கு கொடுத்து விடலாமா?” என்பதுதான் தேர்வில் கேட்கப்பட்ட அந்த கேள்வியாகும். அதற்கு இரண்டு விதமான தர்க்கங்கள் வழங்கப்பட்டு, அவற்றில் சரியான பதிலை தேர்ந் தெடுக்குமாறு, அதற்கு நான்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. “காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்கும் முடிவை இந்தியா எடுக்க வேண்டுமா?”- என்பது கேள்வி. இதற்கு, “ஆம். கொடுத்து விடலாம். இதனால் இந்தியாவிற்கு பணச்செலவு மிச்சமாகும்” என்பது ஒரு தர்க்கமா கும். “இல்லை. அதுபோன்ற முடிவு பிரி வினையை ஊக்குவிக்கும் என்பதால் அந்தப் பகுதியை ஒப்படைக்கக் கூடாது” என்பது இரண்டாவது தர்க்க மாகும். இந்த இரண்டு தர்க்கத்திலி ருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுப்ப தற்கு A. தர்க்கம் 1 வலிமையானது. B. தர்க்கம் 2 வலிமையானது. C. இரண்டு தர்க்கங்களும் வலிமையா னவை. D. இரண்டு தர்க்கங்களும் வலிமையற்றவை” என நான்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதான், மத்தியப் பிரதேச மாநிலத்தில் சர்ச்சையைக் கிளப்பி யுள்ளது. இவ்வளவுக்கும் மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையி லான பாஜக ஆட்சிதான் நடக்கிறது. தேசபக்தி பற்றி ஊருக்கு உபதேசம் செய்யும் அந்த கட்சி, எவ்வாறு இப்படியொரு கேள்வித்தாளை தயா ரித்தது என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதனிடையே, கேள்வித்தாளை தயாரித்ததாக கூறப்படும் 2 பாடநூல் வல்லுநர்களை மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எம்பிபிஎஸ்சி) கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. விசாரணை நடத்தப் படும் என்றும் கூறியுள்ளது.