உ.பி.யில் 2 பிரிவாக உள்ள பாஜக
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வ ராக யோகி ஆதித்யநாத் உள்ள நிலை யில், துணை முதல்வர்களாக கேசவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதக் ஆகி யோர் உள்ளனர். ஆட்சியில் பிரச்சனை இல்லாததை போல வெளியில் காட்டிக் கொண்டாலும், யோகி ஆதித்யநாத் - கேசவ் பிரசாத் மவுரியா இடையே உச்ச கட்ட கோஷ்டி மோதல் தீவிரமாக உள்ளது. கடந்த 2022இல் உத்தரப்பிரதேச மாநி லத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்த பொழுது கேசவ் பிரசாத் மவுரியா முதல்வர் பதவி வேண்டும் என அடம்பிடித்தார். ஆனால் பாஜக மேலிடம் யோகி ஆதித்ய நாத்தை மீண்டும் முதல்வராக நியமித்தது. துணை முதல்வராக கேசவ் பிரசாத் மவுரியா நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த கேசவ் பிரசாத் மவுரி யா முன்பு போல் கட்சி மற்றும் ஆட்சி விஷயங்களில் தலையிடாமல் அமைதி யாகவே இருந்த நிலையில், மக்களவை தேர்தல் முடிவு வெளியானவுடன் முற்றி லும் தலைமறைவாகி விட்டார். தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தி லும் மவுரியா பங்கேற்கவில்லை.
தில்லியில் முகாமிட்டுள்ள மவுரியா?
மக்களவை தேர்தல் முடிவு மூலம் மவுரியாவுக்கும், முதல்வர் யோகிக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள் ளதாக கூறப்படும் நிலையில், உத்தரப் பிரதேச முதல்வராகும் ஆசையில் இருக்கும் கேசவ் பிரசாத் மவுரியா தில்லி யில் முகாமிட்டு முதல்வர் யோகிக்கு எதி ராக பாஜக தேசிய தலைவர்களை தொடர்பு கொண்டு பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உத்தரப்பிரதேச பாஜக அரசியல் களம் ஆட்டம் கண்டு வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் வீடு இடிப்பு
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவ ரும், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு, தெலுங்கானா மாநில தலைநகர் ஹைத ராபாத்தின் லோட்டஸ் பாண்டில் வீடு ஒன்று உள்ளது. வீட்டிற்கு முன்னே பாது காப்பு ஊழியர்களுக்காக வெளியே கட்டிடம் ஒன்று உள்ளது. இதுவும் ஜெகன்மோகனுக்குச் சொந்தமான கட்டி டம் என்ற நிலையில், இந்த கட்டிடம் நடை பாதையை ஆக்கிரமித்து சட்டவிரோத மாக கட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். மேலும் மக்கள் போராட்டம் நடத்தப்போவதாக தகவலும் வெளியாகிய நிலையில், சனி யன்று ஜெகன்மோகன் வீட்டின் ஒருபகு தியை இடித்தது தெலுங்கானா அரசு. பதற்றத்தை ஏற்படுத்திய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தெலுங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் உள்ள ஜெகன் மோகனின் வீட்டின் ஒரு பகுதி மட்டுமே இடிக்கப் பட்டது. அதுவும் ஆக்கிரமிப்பு மற்றும் பொதுமக்கள் புகார் காரணமாகவே அம்மாநில அரசு இடித்துள்ளது. ஆனால் சந்திரபாபு நாயுடுவின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையால் தான் ஜெகன் மோகனின் வீடு இடிக்கப்பட்டுள்ளது என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் பதற்றத்தை ஏற் படுத்தியுள்ளனர்.
3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை முதல் அமலாகும் மோடி அரசு அறிவிப்பு
நாட்டில் தற்போது நடைமுறை யில் இருக்கும் இந்திய குற்ற வியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய 3 சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா – 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா – 2023, பாரதிய சாக்ஷியா – 2023 ஆகிய 3 புதிய சட்டங்களுக்கான புதிய மசோதாக் கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மழைக்கால கூட்டத் தொ டரின்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சி கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் (உள் துறை) பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. இக்குழு, சில ஆலோசனைகளுடன் தனது பரிந்துரையை சமர்ப்பித்த நிலையில், பரிந்துரை அடிப்படையில் திருத்தப்பட்ட மசோதாக்களை குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எனவே நடைமுறையில் இருக்கும் 3 சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக வேட்பாளர் சி.அன்புமணி
சென்னை, ஜூன் 15- விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். பாமக மாநிலத் துணைத் தலைவ ராக இருக்கும் சி. அன்புமணி, விக்கிர வாண்டி தொகுதியில் 2016-ஆம் ஆண்டு ஏற்கெனவே போட்டியிட்டவர் ஆவார். இடைத்தேர்தலில் எப்போதும் பாமக போட்டியிடாது என்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது பாமக தலை வர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறி வித்திருந்தார். ஆனால், தற்போது விக்கி ரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண் டுள்ளார்.
ஜூன் 21 - சத்துணவு ஊழியர்கள் தர்ணா!
சென்னை, ஜூன் 15- காலமுறை ஊதியம் கோரி, ஜூன் 21 அன்று மாவட்டத் தலைநகரங்களில் மாலை நேர தர்ணா நடைபெறும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர்சங்கம் அறி வித்துள்ளது. சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தலைவர் ஆர்.கலா தலைமையில் வெள் ளியன்று (ஜூன் 14) காணொளி வாயிலாக நடைபெற்றது. பொதுச்செயலாளர் அ. மலர்விழி, பொருளாளர் எம்.ஆர். திலக வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், “சட்டமன்ற தேர் தல் வாக்குறுதிப் படி சத்துணவு ஊழி யர்களை அரசு ஊழியராக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 9 ஆயி ரம் ரூபாய் ஓய்வூதியம், 5 லட்சம் ரூபாய் பணிக்கொடை வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சத்துணவு பெண் ஊழியர் களுக்கு பிற துறை ஊழியர்களைப் போன்று 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முத லமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகை யில் மாலை நேர தர்ணா நடத்தப்படும். ஜூன் 24 அன்று முதலமைச்சரை சந்தித்து கோரிக்கைகள் வலியுறுத்தப்படும்” என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.