states

குழந்தையின் கைகள் அகற்றம் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 4- குழந்தையின் கைகள் அகற்றிய  விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவா ஹிருல்லா வலியுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சேர்ந்த தஸ்தகீரின் ஒன்றரை வயது குழந்தை முகம்மது மகீர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வலது கை அகற்றப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தோள்பட்டை வரை கை அகற்றப்பட்டிருக்கிறது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையும் செவிலியரின் பாராமுகமான நடவடிக்கைகளும் அந்த குழந்தையின் கை அகற்றப் பட்டதற்கு காரணம் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ள  நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் இது குறித்து  விசாரணை குழு அமைத்திருக் கிறார். தவறான சிகிச்சையால் குழந்தை யின் கை அகற்றப்பட்டிருந்தால் அங்கு பணியில் இருந்த மருத்து வர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட அனைவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் நடைபெறாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மருத்துவத்துறை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;