சுற்றுலாப் பயணங்கள் ரத்து
ஜம்மு-காஷ்மீர் பெருமளவு சுற்றுலாவை சார்ந்துள்ள மாநிலம் என்பதால் இந்த பயங்கரவாதத் தாக்குதல் அதன் சுற்றுலா துறையில் மற்றும் அது சார்ந்த பொருளாதரத்தில் மோசமான தாக்கத்தை உருவாக்கி வரு கிறது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பயம் காரணமாக காஷ்மீரை விட்டு வெளி யேறி வருகின்றனர். காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் பாது காப்பாக இருக்கிறார்கள் என்பது எங்க ளுக்குத் தெரியும். என்றாலும் பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவம் இங்கே நடந்த பிறகு யாரும் இங்கே தங்கி இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடி யாது. தங்கள் பயணத்தை ரத்து செய்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். கிட்டத்தட்ட 80 சதவீத சுற்றுலா பயணிகள் பயணங்களை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயண ரத்து தற்போது மட்டுமல்ல அடுத்த ஒரு மாதத்துக்கும் கூட நீடிக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலா பயணிகளை கொண்டு வர நீண்ட நெடிய வேலை செய்ய வேண்டிய சூழல் கூட உருவாகலாம் என காஷ்மீரில் உள்ள சுற்றுலா ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன.