states

img

மனிதம் கொன்று மதவெறி பரப்பும் இந்துத்துவா கும்பல்

மனிதம் கொன்று மதவெறி பரப்பும் இந்துத்துவா கும்பல்

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீதான கொடூரமான தாக்குதல் நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்ச்சியின் தீவிரம் குறைவதற்கு முன்பா கவே இந்துத்துவா கும்பல் சமூக வலைதளங்க ளில் முஸ்லிம்களுக்கு எதிராக மதவெறிப்பிரச்சா ரத்தை கட்டவிழ்த்து விட்டனர்.  காஷ்மீர் மக்களின் பொருளாதரத்தை முடக்க வேண்டும். அவர்களை பொருளாதாரப் புறக்கணிப்பு செய்ய வேண்டும். காஷ்மீரை புறக்கணியுங்கள், புல்டோசர் மூலம் வீடுகளை இடியுங்கள்  என பிரசாரம் செய்கின்றனர்.  இந்துத்துவா கும்பல்களில் போலி டிவிட்டர் எக்ஸ் பக்கங்கள், ஆதரவாளர்களின் பக்கங்கள் மட்டும் இன்றி சத்தீஸ்கர் பாஜக வின் மாநிலக்குழுவின் அதிகாரபூர்வ பக்கம் “அவர்கள் சாதியை அல்ல, மதத்தைக் கேட்டார் கள்” என மதவெறியை தூண்டி விட்டுள்ளது. லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப் பின்  நிழல் அமைப்பான  ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்  என்ற பயங்கரவாதிகள் அமைப்பு தாங்கள் தான் தாக்குதலுக்கு காரணம் என ஏற்றுகொண்ட பிறகும் கூட  “ஒவ்வொரு காஷ்மீரியும் இந்த படு கொலையில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு காஷ்மீரியும் இதைச் செய்துள்ளார்” என காஷ்மீர் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வேலையை இந்துத்துவா கும்பல்கள் செய்துள் ளன.   “இஸ்ரேலை போல இந்தியாவும் படு கொலை செய்ய வேண்டும்” என்று  வெளிப்படை யாகவே சில இந்துத்துவா சமூக வலைதளப் பக்கங்கள் இனப்படுகொலை பிரச்சாரம் செய்கின்றன.