திருவனந்தபுரம், ஜுன் 12- இந்தியாவிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையில் வறுமையில் வாடும் குடும் பங்கள் கேரளத்தில் இருப்ப தாக சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 64,006 குடும்பங்களைச் சேர்ந்த 1,03,099 பேர் மிகவும் ஏழ்மையானவர்கள் என்று ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
இதில் 30,923 குடும்பங்கள் வறுமையில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர். 2025 நவம்பர் 1க்குள் கேரளத்தை தீவிர வறுமை இல்லாத மாநில மாக அறிவிப்பதே இலக்கு என்றும் அவர் கூறினார். கேரளத்தில் அரசுப் பணி யாளர் தேர்வாணையம் மூலம் ஆட்சேர்ப்பு அதிக மாக நடந்துள்ளது.
கடந்த இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) அரசு 2,62,131 வீடுகளைக் கட்டிக் கொடுத் தது. இந்த அரசு 1,41,680 வீடு களை கட்டி முடித்துள்ளது. 1,02,780 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நில மற்ற மற்றும் வீடற்ற மக்க ளுக்கு மறுவாழ்வு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆறு அடுக்கு மாடி குடியிருப்புகளின் கட்டு மானப் பணிகள் நிறைவடை ந்துள்ளன. கடற்கரையோர மக்க ளுக்கான ‘புனர்கேஹம்’ திட்டத்தில் 2,246 குடும்பங் களுக்கு வீடுகள் நிர்மாணிக்க ப்பட்டுள்ளன.
390 குடும்பங் களுக்கு அடுக்குமாடி குடி யிருப்புகள் கட்டப்பட்டு ஒப்ப டைக்கப்பட்டன. 752 குடும் பங்களுக்கு வீடுகளும் 1112 குடும்பங்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகளும் நிர்மாணிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.