திருவனந்தபுரம், மே 20- கேரளத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்ட யம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் தொடர்ந்து மிக அதிக கனமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் (அதிக கனமழை) மற்ற மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் (கனமழை) எச்சரிக்கை அறிவிக்கப் பட்டுள்ளது.
கேரளத்தில் வரும் 23ஆம் தேதி வரை கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலைப் பகுதிகளிலும், ரெட் அலர்ட் மாவட்டங் களில் உள்ள சுற்றுலா மையங்களி லும் இரவுப் பயணத் தடை நீடிக்கிறது. கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ள தால், அவசர காலச் சூழலை சமாளிக்கும் வகையில், கேரளக் கடலோரப் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் வரும் 23ஆம் தேதி வரை கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலைப் பகுதிகளிலும், ரெட் அலர்ட் மாவட்டங் களில் உள்ள சுற்றுலா மையங்களி லும் இரவுப் பயணத் தடை நீடிக்கிறது. கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ள தால், அவசர காலச் சூழலை சமாளிக்கும் வகையில், கேரளக் கடலோரப் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
மாலத்தீவு, தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மே 31ஆம் தேதி கேரளாவை வந்தடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் புதன்கிழமைக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது.
இது கடுமையான காற்றழுத்தமாக வலுப்பெறலாம். தற்போது தென் தமிழகத்தில் புயல் உருவாகி, அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் இருந்து தென் தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகி யுள்ளது. இவற்றின் தாக்கத்தால் கன மழை தொடரும் என கணிக்கப் பட்டுள்ளது.