states

img

இரண்டாவது ஆட்சிக் காலத்தின் மூன்றாண்டு நிறைவு

திருவனந்தபுரம், மே 20- தொடர் ஆட்சியாக இரண்டாவது முறை வெற்றி பெற்று அமைந்த இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அரசு மூன்றாண்டுகளை நிறைவு செய்கிறது என்கிற மகிழ்ச்சியான செய்தியை முகநூலில் பகிர்ந்து கொண்டுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

முதல்வர் பகிர்ந்த முகநூல் பதி வில், கடந்த இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அரசாங்கத் தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அனைவருக்குமான - விரிவான மக்கள் வளர்ச்சி மாதிரியை இந்தக் காலப்பகுதியில் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்ல முடிந்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்கு றுதிகளை ஒவ்வொன்றாக நிறை வேற்றி, புதிய திட்டங்களை முன்னெடு த்துச் செல்வதன் மூலம் கேரள வளர்ச்சி மாதிரி புதிய உச்சத்தை எட்டுகிறது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

சமூக நலன் மற்றும் பொருளா தார மேம்பாட்டை சம அளவு முக்கி யத்துவத்துடன் செயற்படுத்தும் கேரளம், தேசிய அளவில் பல  அங்கீ காரங்களைப் பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொச்சி வாட்டர் மெட்ரோவின் வளர்ச்சி, தொழில்துறை, தேசிய நெடுஞ் சாலை மேம்பாடு, பொதுக் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சியை முதல்வர் சுட்டிக்காட்டி யுள்ளார். மேலும் அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களின் வளர்ச்சி குறித்தும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இவை அனைத்தையும் சாத்திய மாக்குவதற்கு மக்கள் வழங்கும் ஆதரவு அரசாங்கத்திற்கு ஆற்றலை யும் உத்வேகத்தையும் தருவதாகவும், நெருக்கடியை ஏற்படுத்த முயற்சித்த போதிலும், அரசாங்கமும் மக்களும் ஒருவரோடொருவர் கைகோர்த்து நிற்பதால் முன்னோக்கிச் செல்ல முடிந்துள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் நலனுக்காக அரசுடன் துணை நிற்கும் அனைவருக்கும் அவர் வாழ்த்துகளையும் தெரிவித்துள் ளார்.