கர்நாடக காவல்துறையில் திருநங்கைகளுக்கான பணிவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக குடிமை பணிகளுக்கான விதிகளின்(1977) திருத்தத்தின் படி அரசு வேலையில் 1 சதவீதம் திருநங்கைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதால் முதல் முறையாக திருநங்கைகள் மாநில காவல்துறையின் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்கிற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
இதற்கு விண்ணப்பிக்க ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) விதிகள் 2020-ன் படி, திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் உறுதிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் காவல்துறை இயக்குநர் பணிக்கான 70 பணியிடங்களில் 5 திருநங்கைகளை பணியில் அமர்த்த தேர்வாணையம் முடிவு வெடுத்துள்ளது. அதற்கு இணையதளத்தில் வருகிற ஜனவரி 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . தடய அறிவியல் துறையில் உள்ள காட்சி குற்றவியல் அதிகாரி பணிக்கும் ஆள்சேர்ப்பு தேவைப்படுவதால் அந்தப் பணிக்கும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 15 என்பது குறிப்பிடத்தக்கது.