states

4 கட்டத் தேர்தலிலேயே பாஜக நிலை குலைந்துவிட்டது!

ஜலான்  (உத்தரப்பிரதேசம்), மே 14 - ஜலான் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் உரையாற்றினார். அப்போது அவர்  பேசியிருப்பதாவது: “நான்கு கட்ட தேர்தல் நடந்து விட்டது.

பாஜக-வினர் நிலை குலைந்து போயிருக்கிறார்கள். ஏமாற்றியவர் களுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டார்கள். இந்தத் தொகுதியில் ஒன்றிய அரசோ, உத்தரப் பிரதேச அரசோ இங்கு வளர்ச்சிக்காக  எது வும் செய்ய வில்லை. நமது விவ சாயிகளும் ஏழை களும் சிரமத்தில் உள்ளனர். அவர்களுக்கு உதவ வேண்டிய ஒன்றிய - மாநில அரசுகள், பெரிய தொழிலதிபர்களுக்கே உதவி னார்கள். அவர்களின் பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்தார்கள்.

ஆனால் ஏழை விவசாயி களின் கடன்களை தள்ளுபடி செய்ய வில்லை. பயிர்களுக்கு உரிய விலை கிடைக்க இந்தியா கூட்டணியும், சமாஜ்வாதி கட்சியும் ஒரு சட்டத்தை இயற்றி குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த முடிவு செய்துள்ளன. பாஜக ஆட்சியில் 1 லட்சம் விவசாயி கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்தியா கூட்டணி மற்றும் சமாஜ்வாதி அரசு அமைந்தால், அனைவரின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். மேலும் ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும். நமது ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் அக்னிவீர் எனப்படும் 4  ஆண்டு வேலை திட்டத்தை ஏற்க மாட்டோம். ஜூன் 4-க்குப் பிறகு தில்லியில் இந்தியா கூட்டணி அரசு  அமைந்தவுடன் அக்னி வீரர் முறையை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வருவோம்” என தெரிவித்தார்.