science

img

செவ்வாயில் நீர்? - சீனாவின் தியான்வென் -1 விண்கல ஆய்வில் கண்டுபிடிப்பு

சீனா, செப்.29-  செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை சீனா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியாகியுள்ள ஆய்வறிக்கை மனிதர்கள் குடியேறுவது குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.  சீனா செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பிய தியான்வென் -1 விண்கலம் கடந்த மே மாதம் 15-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் தென்கோலத்தில் உட்டோபியா பிளேனிஷியா என்ற இடத்தில் தரையிறங்கியது. அதிலிருந்து ஜூராங் ரோவர் செவ்வாயின் மேற்பரப்பில் இருந்து இறங்கி ஆய்வு செய்தது. இந்த ரோவர் கடந்த 113 நாட்களில் 1171 மீட்டர் தூரம் பயணித்து செவ்வாயின் மேற்பரப்புக்கு கீழே சுமார் 80 மீட்டர் ஆழம் வரை ஊடுருவி ஆய்வு செய்தது. இதில் கிடைத்த தரவுகள் அடிப்படையில் சீனா விஞ்ஞானிகள் எழுதியுள்ள ஆராய்ச்சி அறிக்கை சர்வதேச அறிவியல் இதழ் ஆன நேட்ச்சரில் வெளியாகியுள்ளது.

 செவ்வாய் கிரகம் தன்னகத்தை கொண்டுள்ள தண்ணீரை கடந்த 300 கோடி ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக இழந்து வருகிறது என்ற கருதுகோளுக்கு எதிராக அந்த அறிக்கை அமைந்துள்ளது. பூமியின் மேற்பரப்பை ஊடுருவி ஆராய்ச்சி செய்ததன் மூலம் செவ்வாய் கிரகம் குறித்த புதிய உண்மைகளை சீனா உலகுக்கு வழங்கியுள்ளது.  தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவ தாக கூறும் சீனா ஆய்வாளர்கள், செவ்வாயின் சுற்றுச்சூழலிலும், கனிமச் சேர்க்கையிலும் அதன் தாக்கத்தை ஆராய்வதில் அவசியம் என தெரிவித்துள்ள னர். தியான்வென் -1 விண்கலம் தொடர்ந்து வெற்றிகர மாக இயங்குவதாகவும் இதுவரை 1500 ஜிகா பைட் தரவுகளை அள்ளித்தந்திருப்பதாகவும் சீனா ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

;