science

img

இரண்டு ராக்கெட்டுகளை முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கத் திட்டம் - நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் தகவல் 

ஜிஎச்எல்வி மார்க் 3 , எஸ்எஸ்எல்வி ஆகிய இரண்டு ராக்கெட்டுகளை முழுவதும் இந்தியத் தொழில் நிறுவனங்களிடம் தயாரித்துப் பெறுவதற்கு விண்வெளித்துறை திட்டமிட்டுள்ளது . 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் வணிக பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்  உள்நாட்டிலேயே பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை முழுவதும் தயாரிக்க விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்களை 3 நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளது .

இதற்கு , எச்ஏஎல் -எல் அண்டு டி , பெல் உள்ளிட்ட நிறுவனங்கள்  விருப்பம் தெரிவித்துள்ளதாக நியூஸ்பெஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . இவற்றைப் பரிசீலித்து ஏதேனும் ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்யும் நடைமுறை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முடிவடையும் என்றும் , தேர்வாகும் நிறுவனத்துக்கு 5 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் . 

அதன்பின் , ஜிஎச்எல்வி ராக்கெட்டைத் தயாரிக்க விரும்பும் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்றும் தெரிவித்தார் . இஸ்ரோவால் தயாரிக்கப்பட்டு எஸ்எஸ்எல்வி ராக்கெட் திட்டம் வெற்றிபெற்றுவிட்டால் , தொழில் நிறுவனங்களிடம் ராக்கெட் தயாரிக்க ஊக்கமளிக்கும் வகையில் இருக்குமென்றும் அவர் குறிப்பிட்டார் .

விண்வெளி துறை தொடர்பான அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்யும் என இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

 

;