science

img

நிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்தது சந்திரயான் 2

புதுதில்லி, ஜூலை 24- இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலம் புவியின் வட்டப் பாதையில் இருந்து சந்திரனின் வட்டப்பாதைக்குள் புதனன்று நுழைந்தது. நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஜூலை 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது. இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டவாறு புதனன்று பிற்பகல் 2.52 மணிக்கு பூமியின் சுற்று வட்டப்பாதையை கடந்து நிலவின்  சுற்று வட்டப்பாதைக்குள் சந்திரயான்-2  விண்கலம் நுழைந்தது. சந்திரயான்-2 செப்டம்பர் 6 ஆம் தேதி நிலவை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

;