science

img

ஆதித்யா-எல் 1: 2ஆவது கருவி செயல்பட தொடங்கியது! - இஸ்ரோ தகவல்

ஆதித்யா-எல் 1 விண்கலம் சூரியக் காற்றின் துகள் பரிசோதனையின் (ASPEX) 2ஆவது கருவி செயல்பட தொடங்கியது என இஸ்ரோ அறிவித்துள்ளது. 
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா-எல் 1 கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. 125 நாட்கள் பயணம் செய்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'லெக்ராஞ்சியன்’ புள்ளி-1 சென்றடைந்து,  அங்கிருந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்த நிலையில், ஆதித்யா-எல் 1 விண்கலம் சூரியக் காற்றின் துகள் பரிசோதனையின் (ASPEX) 2ஆவது கருவி செயல்பட தொடங்கியது என இஸ்ரோ அறிவித்துள்ளது. 
விண்கலத்தில் 7 கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கருவிகளில் இரண்டாவது கருவியான சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் (SWIS) என்ற கருவி தற்போது செயல்பட தொடங்கியுள்ளது. ஆதித்யா சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.