politics

img

திருமாவளவனின் ‘அரசியல் பானை’

சிதம்பரம் தொகுதியில் நாடாளுமன்றத்திற்கு போட்டி யிடக்கூடிய வேட்பாளர் நீங்கள் அறிந்த வேட்பாளர், புரிந்த வேட்பாளர், உங்களையும் அறிந்து புரிந்து தெரிந்து வைத்திருக்கக்கூடிய ஒரு சிறப்பிற்குரிய வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய தொல். திருமாவளவன் அவர்கள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக உங்களிடத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றார். நிறுத்தப்பட்டிருக் கின்றார் என்று சொல்வதைவிட உங்களிடத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார். ஒப்படைக்கப்பட்டி ருக்கக்கூடிய அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். அதற்கு நீங்கள் அவருக்கு பானை சின்னத்தில் ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்திட வேண்டும்.பானை சின்னம் என்று நான் சொல்கின்ற பொழுது, எனக்கு அறிந்தசில செய்திகளை சொல்லுகின்ற அதே நேரத்தில், நம்முடைய வேட்பாளர் தொல்.திருமாவளவன் அவர்கள் அந்த பானைக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கின்றது என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். இருந்தாலும் நானும் அதை தொடர்ந்து வழிமொழிகின்ற நிலையில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கின்றேன்.


நீங்கள் தொல். திருமாவளவனாக இருக்கின்ற காரணத்தினால், தொல் பழங்காலம் முதல் உள்ள நமது அடை யாளங்களில் ஒன்றான பானை சின்னம் உங்களுக்கு கிடைத்திருக்கின்றது. முதுமக்கள் தாழி எனப்படும் பானை செய்யும் குயவரை, “கலம்செய் கோவே” என்கின்றார்கள். அதாவது, பானை செய்பவரை தலைவன் என்று அழைத்திருக்கிறார்கள். அதனால் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருக்கு பானை சின்னம் கிடைத்திருக்கின்றது. மண் பானைக்கு வரலாற்றில் ஒரு தனி சிறப்பு உண்டு. பனை ஓலைகளில் எழுதுவது என்பது, கற்காலத்தில் எளிய மக்களுக்கு எட்டாத செயல். அதனால் தான் பானைகளில் எழுதி வைத்தார்கள். எனவே எளிய மக்களின்சின்னம் நம்முடைய தொல்.திருமாவளவன் அவர்களுக்கு கிடைத்திருக்கின்றது.சிந்து சமவெளி நாகரிகத்தின் சாட்சியாக இருப்பது பானை தான், ஏன் கீழடியில் கிடைத்திருப்பதும் பானை தான், சிந்து சமவெளி முதல் கீழடி வரைக்கும் திராவிட நாடு, திராவிட நாகரிகம் பரவி இருந்தது என்பதற்கு சாட்சியமான பானை சின்னம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது.எளிய மனிதர்களின் வீடுகள் தோறும் இன்றும் இருப்பது பானைதான். விதைகளை சேமிப்பதற்குபானையை தான் பயன்படுத்து கின்றோம். நீர் இரைப்பதற்கு பெரிய பானையை பயன்படுத்துகின்றோம். உணவு சமைப்பதற்கு தனி பானைஎன்று விதவிதமான வகையில் வைத்திருக்கின்றார்கள். அதில் குறிப்பாக முதன்முதலாக “அரசியல்பானையை” உருவாக்கி இருக்கக் கூடிய வேட்பாளர் தான் நம்முடைய தொல். திருமாவளவன் அவர்கள்.


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் தொல். திருமாவளவனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து...

;