politics

img

100 நாள் வேலைத் திட்டத்தில் கூலி ரூ 300 ரூபாயாக உயர்த்த ஒன்றிய அரசை தமிழ அரசு வலியுறுத்தும்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 

100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாகவும், சம்பளம் 275  ரூபாயிலிருந்து 300 ஆக உயர்த்த  ஒன்றிய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என்று  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில்  2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.
அதில் தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக மாற்றபடும். மேலும், ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்த ஒன்றிய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

;