politics

img

தேர்தலுக்குப் பின் எடப்பாடி ஜீரோ ஆகி விடுவார்

தஞ்சாவூர், ஏப்.5-தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி ஜீரோ ஆகி விடுவார் என்று முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிசார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் தஞ்சையை அடுத்த கரந்தைகுதிரைகட்டித் தெருவில் வியாழக்கிழமை நடந்தது. கூட்டத்திற்கு திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் குத்தாலம் கல்யாணம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரஅவைத்தலைவர் ஆறுமுகம் வரவேற்றார்.தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோருக்கு வாக்குகள் கேட்டு, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது: தற்போதுஅதிமுகவை அழித்து வருகிறார்கள். அவர்கள் பதவியை காப்பாற்றவே பாஜகவை புகழ்ந்து பேசி வருகிறார்கள். தீய சக்திகளை ஒழிக்க வேண்டும். பிரதமர் மோடி நாட்டை துண்டாடநினைக்கிறார். திமுக. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். திமுகவின் வெற்றி தவிர்க்க முடியாதது என்றார்.இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, தேர்தலுக்குப் பின்னர் இபிஎஸ், ஓபிஎஸ் இரண்டுபேரும் காணாமல் போய் விடுவார்கள்.முதல்வர் பழனிச்சாமி மோடியிடம் பயந்து கொண்டு ஆட்சி செய்கிறார். ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகவிற்கு அவர்கள் ஓட்டு கேட்கவில்லை. மோடியின் பாஜகவிற்கு தான் செல் லும் இடங்களில் ஓட்டு கேட்கின்றனர். அதிமுகவிற்கு நாடாளுமன்றத் தேர்தல் பற்றி கவலை இல்லை. சட்டசபைத்தேர்தல் தான் குறிக்கோள். எப்படியும்தங்களது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகச் சட்டசபைத் தேர்தலை குறி வைத்து செயல்படுகின்றனர்.தேர்தலுக்கு பின்னர் பழனிச்சாமிஜீரோ ஆகி விடுவார். துரைமுருகன்வீட்டில் திட்டமிட்டு ரெய்டு நடத்தப் பட்டது. ஏன் ஆளுங்கட்சியினர் வீடுகளில் ரெய்டு நடத்தவில்லை. தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறது. தேர்தலுக்கு பின்னர்இதற்கு எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும்” என்றார்.

;