politics

img

சாதிவாரி கணக்கெடுப்பிற்கு மோடி அஞ்சுவது ஏன்? ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி கேள்வி...

புதுதில்லி:
மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரியாக நடத்தப்பட மாட்டாது என அண்மையில் ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது. எனினும், சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான கோரிக்கை தொடர்ந்துவலுத்து வருகிறது.

இந்நிலையில், பீகார் எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவருமான தேஜஸ்வியும், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் தேஜஸ்வி, “தன்னை பரோபகாரி என்றழைக்கும் பிரதமர் நரேந்திர மோடி சாதிவாரியான கணக்கெடுப்பிற்கு அஞ்சுவது ஏன்?” என கேள்விஎழுப்பியுள்ளார். மேலும், ‘‘இந்த கணக்கெடுப்பை நடத்தினால் பிற்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை வெளியாகும். அதன் மூலம், நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஒரு குறிப்பிட்ட சாதியினரே எப்படி ஆட்சி செய்கிறார்கள் என்பது வெளியாகி விடும்’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நேரில் சந்தித்த தேஜஸ்வி, “ஒன்றிய அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற் கொள்ளவில்லை எனில் மாநில அரசு தனது செலவில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

;