politics

img

லக்கிம்பூர் வன்முறை விஷயத்தில் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி.. 

தில்லி 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூரில் ஒன்றிய பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ரா தனது மகன் ஆசிஷ் மிஸ்ராவை வைத்து கட்டவிழ்த்து விட்ட வன்முறையில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரம் தேசிய அளவில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து விசாரித்துள்ளது. பெயரளவிற்கு ஆணையம் அமைத்து 2 பேர் கைது செய்யப்பட்டு, ஆஷிஷ் மிஸ்ரா வீட்டில் சம்மன் நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தனது டுவிட்டர் பக்கத்தில் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.அதில்," மோடி ஜி நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? உங்களிடம் இருந்து ஒரே ஒரு வார்த்தை அனுதாபத்தை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அது ஒன்றும் மிகக்கடினமானது கிடையாது. இந்த விவகாரத்தில் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் எவ்வாறு எதிர்வினையாற்றி இருப்பீர்கள்? தயவு செய்து எங்களிடம் சொல்லுங்கள்" என ஆவேசமாக பதிவிட்டுள்ளார். 

;