politics

img

ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு...  

தில்லி 
முன்னாள் காங்கிரஸ் தலைவரும், வயநாடு (கேரளா) தொகுதி எம்பி.,யுமான ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் இன்று  திடீரென சந்தித்து பேசியுள்ளார். 

இந்த சந்திப்பின் போது பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், ஹரிஷ் ராவத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்றனர்.  ராகுல் -  பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் உள்நோக்கம் மற்றும் சந்திப்பின் போது என்ன பேசினார்கள் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஏற்கெனவே  பிரசாந்த் கிஷோர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ ஆகியோரை சந்தித்தார்.  

;