politics

img

தேர்தலில் மோடி அலையால் மட்டும் வெற்றி பெற முடியாது...   கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் எடியூரப்பா பேச்சு...  

பெங்களுரு 
கர்நாடக பாஜக நிர்வாகிகள் கூட்டம் தேவனகிரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் எடியூரப்பா திடீரென மோடியை மறைமுகமாக தாக்கி பேசினார். அதில்,"வரவுள்ள கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற மோடி அலை மட்டுமே உதவாது. மக்களவை தேர்தல் என்பது வேறு, சட்டப்பேரவை தேர்தல் என்பது வேறு. பாஜகவின் தேசிய மற்றும் மாநில தலைவர்கள் இணைந்து பணியாற்றினால் தான் 140க்கும் அதிகமான இடங்களை வெல்ல முடியும்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் உள்ளூர் தலைவர்களுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது என குறிப்பிட்டார். மேலும் கர்நாடக சட்டப்பேரவைக்கான கடந்த தேர்தலில் கூட நமது சேவைகளை சொல்லி வெற்றி பெற்றோம் தவிர மோடி அலையால் மட்டுமே வெற்றி பெறவில்லை என்பதை ஒவ்வொரு தொண்டர்களும் புரிந்து கொள்ள வேண்டும்” என எடியூரப்பா பேசினார்.திடீரென மோடி அலையை செல்லாக்காசு போன்று எடியூரப்பா பேசியுள்ளது கர்நாடக பாஜக தரப்பில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.  

;