politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

குறைந்த தூர பயணத்துக்கு ரயில்வே அதிக கட்டணத்தை விதிப்பது மட்டுமல்ல; கோவிட் காலத்தில் பயணத்தை குறைக்க இந்த நடைமுறை என ரயில்வே நிர்வாகம் பசப்புகிறது. கோடிக்கணக்கான சாதாரண இந்திய மக்களுக்கு ரயில்வேதான் பொருளாதார உயிர் மூச்சு என்பதையும் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு தொடர்பு உருவாக்க ஒரே பயண சாதனம் ரயில்வே தான் எனும் அடிப்படை உண்மையைலிருந்து இந்த அரசாங்கம் எந்த அளவுக்கு வெகுதூரத்தில் சென்றுவிட்டது என்பதற்கு இந்தகட்டண உயர்வு ஒரு மேலும் ஒரு உதாரணம்.இந்த கட்டண உயர்வையும் அதனை நியாயப்படுத்தும் வெட்கம் கெட்ட செயலுக்கும் மக்கள் தகுந்த பதிலடியை கொடுப்பார்கள்.

                                                 ********************

வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு நவம்பரில் 27.4 மில்லியனாக இருந்தது. டிசம்பரில் 38.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. ஒரே மாதத்தில் 11.3 மில்லியன் உயர்வு. கோவிட் பெருந்தொற்றுக்கு முன்பே  கூட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில்இருந்தது. இன்னும் இந்த கொடுமை உயர்ந்த வண்ணம் உள்ளது. மோடி ஜி அவர்களே, எங்கே வேலைவாய்ப்புகள்? கூட்டுக் கொள்ளை களவாணி முதலாளிகள் மட்டும்தான் பயன் பெற வேண்டுமா? இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்னும் ஆடம்பர அறிவிப்பை எவரும்இன்னும் மறக்கவில்லை.

                                                 ********************

பெட்ரோல், டீசல் விலை வானத்தை நோக்கி உயர்ந்த வண்ணம் உள்ளது. ஆசிய தேசங்களிலே இந்தியாவில்தான் அதிக விலை. பால்/காய்கறிகளின் விலை உயர்வு மாத ஊதியம் பெறுபவர்களின் வாழ்க்கையைக் கூடதுன்பத்துக்கு உள்ளாக்கியுள்ளது. சிறிது கூட அக்கறையற்ற இந்த அரசாங்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

                                                 ********************

“வாஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையின் தலையங்கம்:கூகுள் டாக் அடிப்படையில் 22 வயதான சூழலியல் மற்றும்பிராணிகள் உரிமை பாதுகாப்பு போராளியை ஒரு அரசாங்கம் கைது செய்துதேசத்துரோகம் குற்றச்சாட்டு சுமத்துகிறது எனில் அந்த அரசாங்கத்தை ஜனநாயகம் என வரையறுக்க இயலவில்லை.

                                                 ********************

பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் மோடியின் புகைப்படம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரண்பட்டது என்பது இதற்குமுன்பு தேர்தல் ஆணையத்திற்கு புலப்படவில்லை.  பெட்ரோல்/டீசல் விலைதாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கும் பொழுது பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் மக்கள் மோடியின் படத்தை பார்த்து கோபம் கொள்கிறார்கள். எனவே மோடியின் சிரிப்பை தேர்தல் ஆணையம் மறைக்க ஆணையிடுகிறது.

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury

;