politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மூன்றாவது அலையை தவிர்க்க வேண்டும் எனில் குறைந்தபட்சம் 69.5 லட்சம் முதல் 1 கோடி தடுப்பூசிகள் தினமும் போட வேண்டும். ஆனால் இதுவரை சராசரியாக 50.8 லட்சம்  அதாவது 27% குறைவாகபோடப்பட்டுள்ளது.  இடைவெளி அதிகரித்து கொண்டே உள்ளது பிரதமர் மோடி அவர்களே! உங்களது வாய்ப்பந்தலும் பொய் பிரதாபங்களும் மூன்றாவது அலையை விரைவுபடுத்திவிடும். வேகமாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்யுங்கள்; வீடு வீடாக தடுப்பூசி திட்டத்தை செயலாக்குங்கள்.

                                ******************

மார்ச் மாதத்திலேயே மென்மையான ஊரடங்கை அமலாக்கியிருந்தால் ஒரு லட்சம் உயிர்களை இரண்டாவது அலையில் காப்பாற்றியிருக்கலாம் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. வரலாறு காணாத மரணங்களுக்கும் துன்பங்களுக்கும் வழி வகுத்த மோடி அரசின் பொறுப்பற்ற தன்மை; மன்னிக்க முடியாத கடமை தவறல்! இந்த அரசாங்கம் இதற்கு பதில் சொல்லவும் பொறுப்பேற்கவும் நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்.

                                ******************

பெட்ரோல் விலையும் உணவு பொருட்களின் விலையும் தினமும் உயர்ந்தன. இப்பொழுது சமையல் வாயுவின் விலையும் உயர்கிறது. பிரதமர் மோடியின் செய்தி இதுதான்: “முடிந்தால் பிழைத்துக்கொள்”

                                ******************

எந்த பொருளாதார சீர்திருத்தமாக இருந்தாலும் அதன் மைய இலக்காக மக்களின் நலன்தான் இருக்க வேண்டும்; இலாபக் கொள்ளைஅல்ல. செல்வம் என்பது பொருட்களின் மதிப்பை பணமயமாக்குவது. அதனை படைப்பது தொழிலாளி வர்க்கம் தமது உழைப்பின் மூலம்! மதிப்பை உருவாக்கும் இந்த படைப்பாளிகளுக்கு முதலில் மரியாதை செலுத்துங்கள்.

;