politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

வங்கிக் கடனை திட்டமிட்டு திருப்பி செலுத்தாத இவர்கள்தான் பா.ஜ.க.வுக்கு நன்கொடையாளர்களாகவும் உள்ளனர். இவர்கள் அடித்தபகற்கொள்ளையில் ஒரு பகுதியையாவது  திருப்பி வாங்குவதை மோடி அரசாங்கம் உத்தரவாதப்படுத்தினால்  தடுப்பூசி மற்றும் மருத்துவ சிகிச்சையை இலவசமாக அளிக்கலாம். கூட்டு கொள்ளை களவாணிகளிடமிருந்து கடனை உடனடியாக திருப்பி வாங்குங்கள்.

                                            **************

1980களில் தனியார்மயமாக்கப்பட்ட இரயில்வேயை பிரிட்டனில் மீண்டும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடிவுகள் எடுக்கப்படும் இதே நேரத்தில் இந்தியாவில் தமிழகத்தில் 11 வழித்தடங்களில் தனியார் ரயிலுக்கு அவசர அவசரமாக திட்டம். மக்களுக்கு சொந்தமான வளங்களை கொள்ளை அடிக்க இடைவிடாமல் முனைப்பு. இந்த கேடுகெட்ட நடவடிக்கையை எதிர்த்து முறியடிக்க ஒன்றுபடுங்கள்.

                                            **************

27 சதவீத இந்தியர்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். அதே சமயத்தில் மோடியின் கள்ள கூட்டு களவாணி முதலாளிகள் ஆசியாவிலேயே பெரும் பணக்காரர்களாக உருவெடுத்துள்ளனர். மக்களை பற்றி கவலையோ அனுதாபமோ இல்லை. ஆனால் பெரும் பணக்காரர்கள் தேசிய வளங்களை பகற்கொள்ளை அடிக்க அனுமதி. மக்களுக்கு நேரடி நிதி உதவியும் இலவச உணவு தானியங்களையும் உடனே தருக!

;