இந்திய மக்கள் மீது பேரழிவாக திணிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு துவங்கி ஒன்பது மாதங்கள் ஆனபின்னரும் நமது இளைஞர்களும், பெண்களும் இன்னும் வேலை வாய்ப்பற்றவர்களாக ஏராளமானோர் காத்துக் கிடக்கிறார்கள். இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் நடத்திய வீடு வாரியான நுகர்வோர் நிலை குறித்த ஆய்வு சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில்கோவிட்டுக்கு முந்தைய அதே நிலைமை இப்போது இல்லை; சுமார் 80 சதவீதம் பேர்தான் மீண்டும் பணிகளுக்கு திரும்ப வாய்ப்புக் கிடைத்துள்ளது; அவர்களுக்கும் முழுமையான வேலையில்லை; பழைய சம்பளம் இல்லை. குறிப்பாக ஏராளமான இளம் தொழிலாளர்கள், பெண்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர்.ஊரடங்கு காலத்திலும் அதற்கு பின்னரும் வேலையிழந்தவர்களில் 59 சதவீதம் பேர் 15 முதல் 24 வயதிற்குட்பட்டவர்கள். 40 சதவீதம்பேர் 25 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள். 35 சதவீதம் பேர் 35 முதல்44 வயதிற்குட்பட்டவர்கள். வயது முதிர்ந்த தொழிலாளர்கள் சில நிபந்தனைகளோடு மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். பெண் தொழிலாளர்களைப் பொறுத்தவரை கோவிட்டுக்கு முன்பு ஒரு நிறுவனத்தில் 100 பேர் வேலை செய்திருந்தால் கோவிட்டுக்கு பின்பு 74 பேரின் வேலை பறிக்கப்பட்டுள்ளது. கோவிட் ஊரடங்கு தளர்வுகள் அதிகரிக்கப்பட்ட பிறகும் கூட வேலைக்கு எடுப்பதற்கு பதிலாக அந்த 100 பேரில் மேலும் 11 பேர் வேலையிழந்திருக்கிறார்கள். எனவே நிலைமை மிக மோசமானதாக இருக்கிறது. ஆனால் இதைப்பற்றி எந்தக் கவலையும் மத்திய அரசுக்கு இல்லை. அதுதான் பட்ஜெட்டில் பிரதிபலித்திருக்கிறது. கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கு இப்போது தான் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் இப்போது 42 சதவீத நிதியை பட்ஜெட்டில் வெட்டியிருக்கிறார்கள்.
*******************
90 ஆண்டுகளுக்கு முன்பு இளம் அரசியல் ஊழியர்களுக்காக மாவீரன் பகத்சிங் எழுதிய கடிதம் இன்றைக்கும் பொருந்துகிறது. 1931 பிப்ரவரி 2 அன்று எழுதப்பட்ட அந்தக் கடிதம் வரலாற்று ஆவணமாக நிலைத்துநிற்கிறது. அந்தக் கடிதத்தில் இந்திய தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டுமென்று பகத்சிங் கூறியிருக்கிறார். விவசாயிகளின் பேரெழுச்சி நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் பகத்சிங்கின்கடிதம் பொருத்தப்பாடு உடையதாகவும் உத்வேகம் தருவதாகவும் இருக்கிறது.
*******************
தில்லி எல்லைகளில் விவசாயிகளை ஆயுதம் தாங்கிய கும்பல் தாக்கியுள்ளது. காவல்துறை அந்த கும்பலுக்கு பாதுகாப்பு தருகிறது. சமீபகாலமாக நிலைநாட்டப்பட்டுள்ள சூழ்ச்சியின்படி, கும்பல் தாக்கிவிட்டு சென்றுவிடும். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மீதுதான் வழக்குகள் தொடரப்படும். இந்த வன்முறை மிகக்கடுமையான கோபத்தை விளைவித்துள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் மேலும் மேலும் எல்லைப் பகுதிக்கு வந்து எதிர்ப்பு இயக்கத்தை வலுப்படுத்துகின்றனர்.
*******************
30 விவசாய தலைவர்கள் மீது 25 முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கலகம் செய்தல்/ சதித்திட்டம்/கொலைமுயற்சி/திருட்டு/ஜனவரி 26 நிகழ்வுகளை தூண்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் புனையப்பட்டுள்ளன. கடந்த மூன்று நாட்களில் மூத்த பத்திரிக்கையாளர்கள் உட்பட 9 பத்திரிகையாளர்கள் மீது வழக்கு தாக்கல். தேசத்துரோகம் உட்பட குற்றசாட்டுகள் பதிவு. விவசாய தலைவர்களை ஒடுக்கநினைப்பதும் ஊடகவியலாளர்களின் குரல்களை நசுக்க நினைப்பதும் கடுமையான கண்டனத்திற்கு உரியது.
*******************
தில்லியை நோக்கிச் செல்லும் சாலைகள் அனைத்திலும் ஏதோ போர்நடப்பது போல கோட்டைகள் போல் சுவர்கள் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள் போலீசார். இங்கு என்ன, எல்லைகளில் நிறுத்தப்பட்டிருக்கிற பாதுகாப்புப் படையினர் குவிக்கப்படப் போகிறார்களா? நமது அன்னதாதாக்களுக்கு எதிராக அவர்கள் நிறுத்தப்படப் போகிறார்களா? ஜனநாயகத்தில் அதற்கெல்லாம் எந்த இடமும் இல்லை என்பதை உணருங்கள் ஆட்சியாளர்களே?
தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....
முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/
டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury