politics

img

பாஜக வகுப்புவாத விஷத்தை பரப்புகிறது... : சரத்பவார்....

ராஞ்சி:
நாட்டில் சகோதரத்துவத்தை நிலைநாட்ட வேண்டியது மத்திய பாஜக அரசின் பொறுப்பு. ஆனால், பாஜக வகுப்புவாத விஷத்தை பரப்பி வருகிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் ஞாயிறன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அவர் பேசுகையில் , நாட்டில் சகோதரத்துவத்தை நிலைநாட்டுவது மத்திய அரசின் பொறுப்பு. ஆனால், பாஜக வகுப்புவாத விஷத்தை பரப்பி வருகிறது. விவசாயிகள் 100 நாட்களாக போராடி வருகின்றனர். பிரதமர் மோடிக்கு கொல்கத்தா சென்று மேற்கு வங்காள அரசுக்கு எதிராகப் பொதுக்கூட்டம் நடத்த நேரம் இருக்கிறது. ஆனால், தில்லியில் போராடி வரும் விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லை’ என்றார்.  
 

;