politics

img

சட்டமன்ற தேர்தல்... தமிழகத்தில் ஆம் ஆத்மி போட்டி இல்லை... 

தில்லி 
சாமானிய மக்கள் கட்சி என அழைக்கப்படும்  ஆம் ஆத்மி கட்சி தலைநகர் தில்லியில் ஆட்சி செய்து வருகிறது.  தில்லி மட்டுமின்றி பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் போட்டியிட்டு சிறியளவு வெற்றியை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் குஜராத் உள்ளாட்சி இடைத்தேர்தலில் சூரத் மாநகராட்சியில் குறிப்பிட்ட இடங்களை கைப்பற்றி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. தமிழகத்தில் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் இணைத்து போட்டியிடப் போவதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என கட்சியின் தலைவரும், தில்லி முதல்வருமான  அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
 

;