politics

img

எம்.,பி பதவியை ராஜினாமா செய்த அப்ரிதா கோஷ்....

கொல்கத்தா 
திரிணாமூல் காங்கிரசின் மூத்த தலைவரும் நாடக கலைஞருமான அப்ரிதா கோஷ் திடீரென தனது எம்பி (மாநிலங்களவை) பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவருடைய பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் உள்ள நிலையில்,  மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அடித்துள்ளார்.

அப்ரிதா கோஷ் ஏற்கெனவே 2014 முதல் 2019 வரை பலூர்ஹாட் தொகுதியில் லோக்சபா எம்பியாக இருந்தார். அதன்பின்பு ஏப்ரல் 2020-ஆம் ஆண்டு ராஜ்யசபாவிற்கு தேர்வு செய்யப்பட்டார்.இவரது ராஜினாமாவிற்கு முழுமையான காரணம் இன்னும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

;