politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

செய்தி: மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட 340 பேர் கடந்த 5 ஆண்டுகளில் உயிரிழந்துள்ளனர்.யெச்சூரி: “ஸ்வச் பாரத்” படாடோப  அதிரடி பிரச்சாரத்தில் மறைக்கப்பட்ட மனிதாபிமானமற்ற உண்மை இது. “ஸ்வச் பாரத்” விளம்பரத்திற்கு பயன்படுத்தப்பட்ட பணத்தை இத்தகைய மனித விரோத இழி செயல்களை தடுப்பதற்கு ஏதுவாக இயந்திரங்கள் வாங்க பயன்படுத்த வேண்டும்.

                                             ******************** 

செய்தி : கடந்த ஆண்டு வங்கிகள் கடன் திருப்பித் தராத முதல் 100 நிறுவனங்களின் ரூ.62,000 கோடி தள்ளுபடி செய்துள்ளனர். ஒட்டுமொத்தத்தில்2 லட்சத்து 88 ஆயிரம்  கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.யெச்சூரி:  மோடியின் கூட்டுக் கொள்ளை களவாணி முதலாளிகளின் பகற்கொள்ளை எவ்வித தொய்வும் இல்லாமல் தொடர்கிறது. ஏழை மக்களுக்குநேரடி நிதி உதவியும் இலவச உணவு தானியங்களையும் தருவதற்கு மோடி அரசாங்கம் மறுக்கிறது. நமக்கு அன்னமிடும் விவசாயிகளின் போராட்டங்கள் இரக்கமில்லாமல் ஒடுக்கப்படுகின்றன. ஆனால் மக்களின் சேமிப்பை கூட்டுக் கொள்ளை களவாணிகள் பகல் கொள்ளையடிக்க அனைத்துவாய்ப்புகளும் உருவாக்கப்படுகிறது.

                                             ******************** 

பெரும் தொற்று/தான்தோன்றித்தனமான ஊரடங்கு/பொருளாதார மந்தம் ஆகியவை விளைவித்த துன்பங்கள் போதாதென்றுஎவ்விதத்திலும் நியாயமற்ற பெட்ரோல்/டீசல் விலை உயர்த்தப்படும்கொடுமையும் நடக்கிறது. கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலை ஒருபேரலுக்கு105 இல் இருந்து 50 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் நமது நாட்டில்மட்டும் பெட்ரோல்/டீசல் விலை  வானத்தை நோக்கி பாய்ந்து கொண்டுள்ளது. மோடி அரசாங்கம், ஏற்கனவே துன்பக் கடலில் உள்ள மக்களை கசக்கிப் பிழிந்து மெகா லாபம் கொள்ளையை தன்வசமாக்குகிறது.

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;