politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

10 அரசியல் கட்சிகளை சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராடும் விவசாயிகளுக்கு குடிநீர்/ மின்சாரம்/ இணையதளம் இணைப்புகளை உடனடியாக தர வேண்டுமென உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த முக்கிய பிரச்சனையை உள்துறை அமைச்சர் உடனடியாக தீர்க்க வேண்டும். அடக்குமுறைகளை நிறுத்த வேண்டும்.

                                                     ***************

பேராசிரியர் டி. என். ஜா அவர்கள் இயற்கைஎய்தினார். மிக ஆழ்ந்த அனுதாபங்கள்.

பண்டைய இந்திய வரலாற்றின் மிகச்சிறந்தவரலாற்றாசிரியர். வரலாற்றை அறிவியல் பூர்வமாகவும்பகுத்தறிவு பூர்வமாகவும் எப்படி ஆய்வு செய்ய வேண்டும் என்பதை பல தலைமுறைகளுக்கு கற்றுக்கொடுத்தவர். பண்டைய இந்தியாவில் பசு புனிதமாககருதப்படவில்லை என்பதை ஆதாரங்களுடன் நூலை எழுதினார். ஏராளமான பல முக்கியமான நூல்களையும்எழுதினார். மதவாத சக்திகளையும் பிற்போக்குசக்திகளையும் எதிர்த்து மிகத் தைரியமாக போராடியவர். அதனாலேயே பலவழக்குகளை சந்தித்தவர். தன் இறுதி மூச்சு வரை ஒரு புதிய புத்தகத்தை எழுதுவதற்கான பணியில் இருந்தார்.

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;