politics

img

அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவிப்பு... 

சென்னை 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  

இந்த தகவலை அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளரும், சசிகலா சகோதரியின் மகனுமான தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

 சசிகலா அரசியல் ஓய்வு குறித்து அவர் அறிக்கையில் உள்ளதாக கூறுகையில்,"ஜெயலலிதா உயிருடன் இருந்த பொழுது அவரின் உண்மை சகோதரியாக இருந்த நான் அரசியலில் இருந்து ஒதுக்குகிறேன். பதவிற்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை எனவும், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன் என அறிக்கையில் இருப்பதாக தினகரன் கூறியுள்ளார்.

 மேலும் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் வரும் தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் எனவும் சசிகலா கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். சசிகலா ஓய்வு அறிவித்தாலும்  அமமுக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என தினகரன் கூறியுள்ளார்.  
 

;