internet

img

120 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் தென்பட்ட அரியவகை வாத்து

120 ஆண்டுகளுக்கு பிறகு, ஆர்க்டிக் துருவ பகுதியை தாயகமாக கொண்ட மாண்டரின் வாத்து மீண்டும் இந்தியாவில் காணப்பட்டதால் , பறைவைகள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆர்க்டிக் துருவப்பகுதியை பிறப்பிடமாக கொண்டவை இந்த மாண்டரின் வாத்து இனம். இந்த வாத்து வடக்கு அமெரிக்காவில் உள்ள வுட் வாத்து இனத்தை ஒத்தது. பெரும்பாலும், சீனா, ஜப்பான், கொரியா, ரஷ்ய உள்ளிட்ட நாடுகளின் சில பகுதிகளில் இந்த வகை வாத்து காணப்படும்
இந்நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள திப்ரு -ஷாய்கோவா தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள குளத்தில் இந்த வாத்து நீந்திக் கொண்டு இருப்பதை , , பறவை நல ஆர்வலர் மாதப் கோகோய் கண்டுள்ளார்.
பறவைகள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்து கூறியதாவது 
துருவப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய நாடுகளில் வசித்து வரும் இந்த மாண்டரின் வாத்துகள், தற்போது இந்தியா போன்ற நாடுகளுக்கு வருகை தந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு முன், ,  1902 -ஆம் ஆண்டில், இந்த வாத்து இனம், இந்தியாவிற்கு வந்து உள்ளதாக குறிப்பில் இருப்பதாக தெரிவித்தனர்.
18 வினாடிகள் உள்ள, இந்த மாண்டரின் வாத்து குறித்த காட்சிகள் மத்திய வனத்துறை, சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கவுரவித்து உள்ளது.

 


 

;