india

img

தேர்தல் முடியும் வரை வீட்டிலேயே இருங்கள் அமைச்சரே... ஆந்திர அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.....

ஐதராபாத்:
உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை ஆந்திரப்பிரதேச மாநில பஞ்சாயத்துத் துறை அமைச்சர் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று ஆந்திர மாநிலத் தேர்தல் ஆணையர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

ஆந்திர மாநிலத்தில் 4 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்புமனுத் தாக்கல் முடிந்த பல இடங்களில் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் போட்டியின்றி தேர்வாகி வருகின்றனர். எதிர்க்கட்சி வேட்பாளர் களை ஆளும் கட்சியினர் மிரட்டி வேட்புமனுவை வாபஸ்பெறச்செய்வதாக தேர்தல்ஆணையரிடம் பலர் புகார் அளித்தனர். இதனால் சித்தூர், குண்டூர் மாவட்டங்களில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார்.இதுதொடர்பாக ஆந்திர பஞ்சாயத்துத் துறை அமைச்சர் பெத்திரெட்டி ராமசந்திரா ரெட்டி கூறுகையில், தேர்தல் ஆணையரின் மிரட்டலுக்கு யாரும் பயப்படமாட்டோம். அவரின் பேச்சை அரசுஅதிகாரிகளோ அல்லது அரசு ஊழியர்க ளோ கேட்கத் தேவை யில்லை.

அவரின் பேச்சை கேட்டு பணி செய்யும் அரசு ஊழியர்கள் தேர்தலுக்கு பிறகு துறை ரீதியாக தண்டிக்கப்படுவார்கள் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து அமைச்சரின் பேச்சு குறித்து ஆளுநருக்கு தேர்தல் ஆணையர் புகார் கடிதம் எழுதினார். மேலும் மாநில காவல்துறை இயக்குநருக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், “அமைச்சர் ராமசந்திரா ரெட்டியின் பேச்சால் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மிரட்டலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை, அதாவது பிப்ரவரி 21 ஆம் தேதி வரை அவர்வீட்டை விட்டு வெளியே வராமல்இருப்பதை உறுதிசெய்யவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.  இதனால் ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையரின் உத்தரவை ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் பெத்திரெட்டி ராமசந்திரா ரெட்டி தெரிவித்துள்ளார்.
 

;