india

img

ராஜஸ்தானில் இரு கார்கள் மோதி விபத்து: 3 பேர் பலி

ராஜஸ்தானில் இரு கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் அனுப்கர்-சூரத்கர் நெடுஞ்சாலையில் இன்று (புதன்கிழமை) இரு கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், கோமல்பிரீத் ( வயது 24), அவரது மகள் ஹார்லீன் கவுர் (3) மற்றும் மற்றொரு காரில் இருந்த ராஜ்ஜோ பாய் (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், காயமடைந்த 14 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

;