india

img

ராஜஸ்தான்: 5ஆம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி

ஜெய்ப்பூர், மார்ச் 17-
ராஜஸ்தானில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தன. 
தற்போது, பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அம்மாநில கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் அறிவித்துள்ளார்.

;