ஜெய்ப்பூர்
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் உள்ளார்.
இந்நிலையில் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு பெண்களுக்கு இலவச சானிடரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஒன்றை அமல்படுத்தவுள்ளது.
இதற்காக ரூ.200 கோடி ஒதுக்க முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளான நவம்பர் 19 முதல் தொடங்கவுள்ளதாக மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான் அரசின் இந்த இலவச சானிடரி நாப்கின்கள் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.