ராஜஸ்தானில் உள்ள தனியார் மருத்துவமனையில் 24 வயது பெண்ணை ஐ.சி.யூ அறையில் வைத்து மயக்க மருந்து செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்த ஆண் செவிலியர் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் 24 வயதுள்ள இளம்பெண் ஒருவர், நுரையீரல் தொற்று காரணமாகச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அந்த மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ) அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நிலையில் சிராக் யாதவ் என்ற மருத்துவ உதவியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அந்த இளம்பெண்ணை, மருத்துவ உதவியாளர் நேற்று அதிகாலை அங்குச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் அப்போது செவிலியரின் செயலைக் கண்டு கூச்சலிட முயன்று, அலாரம் பட்டனை அழுத்த, மேலும் ஒரு ஊசியை அவர் தனக்குச் செலுத்தியதாகவும், ஒரு பெண் செவிலியர் உள்ளே வந்து காப்பாற்றுவதற்குப் பதிலாக தன்னை தாக்கியதாகவும் அப்பெண் புகார். அவருக்கு மருத்துவ உதவியாளர் மயக்க ஊசியை செலுத்தியுள்ளார்.
இதனையடுத்து மயக்கம் தெளிந்த பிறகு அந்த இளம்பெண், நடந்த சம்பவம் குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக பெண்ணின் குடும்பத்தார் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் மருத்துவ உதவியாளர் சிராக் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.