india

img

‘தோனி ’ படத்தில் நடித்த  இந்தி நடிகர் தற்கொலை...

மும்பை:
தோனி வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தில் கதாநாயகன் சுஷாந்த் சிங்குடன் இணைந்து நடித்தவர்களில் ஒருவரான சந்தீப் நாகர் செவ்வாயன்று திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் இந்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.நடிகர் அக்‌ஷய் குமார் நடித்த கேசரி, சுஷாந்த் சிங் நடித்த எம்.எஸ். தோனி ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் சந்தீப் நாகர் நடித்திருந்தார். முகநூல் பதிவு மூலம் தமது வாழ்க்கை மற்றும் தொழிலில் ஏற்பட்ட பின்னடைவுகளை விவரித்த அவர் இறுதியில் தற்கொலை முடிவை அறிவித்தார்.மும்பையில் வசிக்கும் சந்தீப் நாகர் தமது தற்கொலைக்கு குடும்பத்தினர் உள்பட யாரும் காரணமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். சந்தீப் நாகர் தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;