india

img

இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்கிறார்   ‘சீரம்’ பூனவல்லா.....

மும்பை:
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு சீரம் நிறுவனத்தின் சிஇஒ ஆதர் பூனவல்லா மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கோவிஷீல்டு தடுப்பூசியைத் தயாரித்து வழங்கும் சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி  ஆதர் பூனவல்லாவிற்கு ஏற்கனவே மத்திய அரசால்‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு சீரம் நிறுவனத்தின் சிஇஒ ஆதர் பூனவல்லா மும்பை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர் தத்தா மானே தாக்கல் சார்பில் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில்,  கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டை விரைந்து தருமாறு மாநில முதல்வர்கள், தொழில் அதிபர்கள் மிரட்டல் விடுப்பதாகவும் எனவே உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனக்கும்தனது குடும்பத்தினருக்கும் இசட் பிளஸ்பாதுகாப்பு வழங்குமாறும்  பூனவல்லாவுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யஉத்தரவிடவும் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.

;