மும்பை:
பயன்படுத்தி,வீசியெறியப்பட்ட முகக்கவசங்களை வைத்து படுக்கைகள் தயாரித்த தொழிற்சாலைக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டம் குசம்பா கிராமத்தில் படுக்கைகளை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் ஊழியர்கள் சிலர், கீழேவீசப்பட்ட பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை சேகரித்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்துதிங்களன்று தொழிற்சாலையில் சோதனையிட்டனர்.அப்போது, அங்கு தயாரிக்கப்படும் படுக்கைகளில் பஞ்சுகளை வைப்பதற்கு பதிலாக, பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் வைக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த ஆலைக்கு சீல் வைத்தனர்.ஆலையின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொழிற்சாலையில் டன் கணக்கில் இருந்த பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை தீவைத்து எரித்தனர்.