india

img

ஜூலை மாதத்தில் இரண்டாவது முறையாக மும்பை தாராவியில் இன்று பூஜ்ஜிய எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் மும்பையில் அமைந்துள்ள, ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக, கொரோனா தொற்றின் எண்ணிக்கை பூஜ்யத்தில் தொடர்கிறது. 

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள மும்பை மாநகராட்சி, தாராவி பகுதியில் இம்மாதத்தில் இரண்டாவது முறையாக இன்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது. தாராவியில் இதுவரை 6,905 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 6,525 நோயாளிகள் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர். மேலும் 21 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 

;