india

img

மருத்துவமனை மீது காரை வைத்து மோதிய பாஜக தலைவர்.... ஊழியர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல்....

மும்பை:
கொரோனா தொற்றுப் பாதிப்புக்கு தந்தையை இழந்த பாஜகதலைவர் ஒருவர், மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர தஜ்னே. பாஜக-வின்மாநிலத் தலைவர்களில் ஒருவராவார். இவருடைய மனைவி சீமாதஜ்னேவும் பாஜக-வின் முக்கியத் தலைவராக உள்ளார்.இந்நிலையில், ராஜேந்திர தஜ்னோ, கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தனது தந் தையை, இங்குள்ள ‘பைட்கோ’ எனும் தனியார் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அன்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். ஆனால், அப்போதே தஜ்னோவின் தந்தை ஆபத்தான நிலையில் இருந்ததாக கூறப் படுகிறது. இதனால், அன்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

இதனால் பாஜக தலைவர் ராஜேந்திர தஜ்னோ, கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். மருத்துவமனை நிர்வாகத்திடம் மிகவும் மோசமான வகையிலும், அராஜகமான முறையிலும் நடந்து கொண்டஅவர், தனது பிராண்ட் நியூ டொயோட்டா இன்னோவா காரைக் கொண்டு மருத்துவமனையின் கீழ் தளத்தை சுக்கு-நூறாக நொறுக்கியுள்ளார். தொடர்ந்து, மருத்துவமனை பணியாளர்கள் சிலர் மீதும் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளார்.ராஜேந்திர தஜ்னேவின் இந்த அத்துமீறலுக்கு, மாநிலம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, மகாராஷ்டிரஅரசு அவர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

;