india

img

அஜித் பவாருக்கு சொந்தமான ரூ. 65 கோடி சொத்துக்கள் முடக்கம்... ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை நடவடிக்கை..

மும்பை:
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாருக்கு சொந்தமான ரூ. 65 கோடி மதிப்பிலான சர்க்கரை ஆலை சொத் துக்களை ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை முடக்கி உள் ளது.மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியில், 2007 முதல்2012-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், கடன் வழங்கியது உள்ளிட்ட விஷயங்களில், ரூ. 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக 2019-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியின்போது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை அடிப்படையாக வைத்து சட்டவிரோத பணப் பரிமாற்ற மோசடி நடந்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவார்,அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது.உரிய ஆவணங்கள் இன்றி கடன் வழங்கியது, குறைந்த விலைக்கு சர்க்கரை ஆலை சொத்துகளை விற்றது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.இந்நிலையில் கூட்டுறவு வங்கி ஊழல் தொடர்பாக சத்தாரா மாவட்டத்தின் சிமன்காவ் - கோரேகாவ் பகுதியில்உள்ள ரூ. 65 கோடி மதிப்பிலான அஜித்பவாரின் சர்க்கரை ஆலைச் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள் ளது.குறைந்த மதிப்பிலான சர்க்கரை ஆலை சொத்துக் களைக் காட்டி மாநில கூட்டுறவு வங்கியில் ரூ. 700 கோடிஅளவிற்கு கடன் வாங்கப்பட்டு உள்ளதாக அஜித் பவார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

;