மும்பை , ஜன.29
மும்பை புறநகர் ரயில் சேவை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை நகரில் புறநகர் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மும்பை புறநகர் மின்சார ரயில் சேவை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.