india

img

மகாராஷ்டிரத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

மகாராஷ்டிரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.

கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.
அதன்படி, திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க வேண்டும்.
திரையரங்குகள் மற்றும் நிகழ்ச்சி அரங்குகளில் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி.
வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் 100 பேருக்கு மேல் கூட தடை.
மேலும், முகக்கவசங்கள் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

;